ராணுவ வீரர் நடத்தும் இயற்கை அங்காடி – வேலூர் அனுபவம்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, மூலைகேட் பகுதியில், பொன்னி இயற்கை அங்காடி இயங்குகிறது. திருவண்ணாமலை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பயணிகள் கவனத்தை ஈர்க்கும் இந்த அங்காடியின் உரிமையாளர், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ராணுவ வீரர். இவர் பாரம்பர்ய நெல் சாகுபடியில் ஈடுபட்டு, அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறார்.
ஒரு பகல்பொழுதில் அங்காடிக்கு நேரில் சென்ற போது, 20க்கும் மேற்பட்ட பாரம்பர்ய அரிசி வகைகள் கண்ணுக்கு பட்டது. பாரம்பர்ய அரிசியில் தயாரிக்கப்பட்ட இட்லி மாவு, சத்துமாவு ரெடிமிக்ஸ், அவல், புட்டு மாவு, கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் விற்பனைக்கு உள்ளன. மேலும், சிறுதானிய கஞ்சி ரெடிமிக்ஸ், உளுந்து, பச்சைப்பயறு, காராமணி, நாட்டுச்சர்க்கரை, செவ்வாழை, சிவப்பு கொய்யா போன்ற பொருட்களும் அங்கு கிடைக்கின்றன.











