சிங்கம்புணரியில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 8 ஜோடிகள், சிறிய மாடு பிரிவில் 18 ஜோடிகள் கலந்து கொண்டனர். பெரிய மாட்டு வண்டிகளுக்கு 8 கிமீ, சிறிய வண்டிகளுக்கு 6 கிமீ தொலைவும் திட்டமிட்டு நடந்தது.
திண்டுக்கல் – காரைக்குடி நெடுஞ்சாலையில் மாட்டு வண்டிகள் சீறிப் பாய்ந்ததை, சாலையின் இருபுறமும் கூட்டமாகக் குவிந்திருந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் காண்வதற்காக திரண்டனர். பந்தயத்தில் முன்னணியில் வெற்றி பெற்ற முதல் 4 மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் மற்றும் ரொக்கத் தொகைகள் வழங்கப்பட்டன.











