Wednesday, Mar 18, 2026, 9:32 AM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

அரசு எதிர்ப்பு Gen Z போராட்டம் – நேபாளம் மற்றும் வங்கதேசம் இளைஞர்கள் மொராக்கோவில்.

Oct 6, 2025
A A
அரசு எதிர்ப்பு Gen Z போராட்டம் – நேபாளம் மற்றும் வங்கதேசம் இளைஞர்கள் மொராக்கோவில்.
FacebookTwitterWhatsappTelegram

மொராக்கோவில் வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – அரசு எதிர்ப்புப் போராட்டம் கம்பிக்குது

நேபாளம், வங்கதேசத்துக்கு பிறகு, வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் Gen Z எனப்படும் இளம் தலைமுறை இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். பாதுகாப்பு படையினருடன் மோதல்களில் 3 பேர் பலியான நிலையில், இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது.

மொராக்கோ தற்போது வன்முறை, தீ வைப்பு போன்ற பதற்ற சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளது. அரசாங்கத்தின் அலட்சியத்தால் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்கு போதுமான நிதி வழங்கப்படாமல் இருப்பது இளம் தலைமுறை இளைஞர்களை போராட்டத்திற்கு தூண்டியது.

2030ஆம் ஆண்டு மொராக்கோவில் நடைபெறவிருக்கும் கால்பந்து உலகக்கோப்பை போட்டிக்காக பல கோடி செலவில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்ற நிலையில், பொதுச் சேவைகள் நிதியின்மையின் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக, அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள், ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகள், இளம் தலைமுறையினரிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளன. அண்மையில் அகாடிர் நகரில் உள்ள பொது மருத்துவமனையில் பிரசவத்தின்போது 8 கர்ப்பிணிகள் உயிரிழந்த சம்பவம் இளைஞர்களுக்கு ஆத்திரத்தை தூண்டிய முக்கிய காரணமாகும்.

Gen Z போராட்டம்:
“விளையாட்டு அரங்குகள் எங்கே? மருத்துவமனைகள் எங்கே?” என்று முழக்கமிட்ட இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கி, மொராக்கோவின் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. சமூக சமத்துவமின்மைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், ஊழலுக்கு எதிராக முழக்கமிடவும் இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

மோதல்கள் மற்றும் பலி:
லெகிலா நகரில் நடந்த போராட்டத்தின் போது, பாதுகாப்புப் படையினரும், போராட்டக்காரர்களும் மோதியதில் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மொராக்கோ அரசு போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அறிவித்துள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள், மன்னர் ஆறாம் முகமது நேரடியாக பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

மொராக்கோவில் மன்னருக்கு அரசை நியமிக்கும் மற்றும் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் உள்ள நிலையில், Gen Z இளைஞர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். போராட்டம் பரவி வரும் நிலையில், அரசு மற்றும் மன்னர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்பது மிக முக்கியமாக பார்க்கப்பட இருக்கிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X

Like this:

Like Loading...
Tags: Gen ZGen Z இளைஞர்கள்
Previous Post

இந்தியா வருகை தரும் தலிபான் தலைவர்: புதிய பயணத் திட்டம் பாகிஸ்தானுக்கு சவால்.

Next Post

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : ரஷ்ய அதிபர் புதின் கடும் விமர்சனம்!

Related Posts

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை இந்திய பிரதிநிதி கண்டனம்
All News

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை இந்திய பிரதிநிதி கண்டனம்

அமெரிக்கா: குடியேற்றக் கொள்கை போராட்டத்தின் போது பெண்ணின் உயிர் பலி
World

அமெரிக்கா: குடியேற்றக் கொள்கை போராட்டத்தின் போது பெண்ணின் உயிர் பலி

ஜப்பானில் பலத்த நிலநடுக்கம்: அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
World

ஜப்பானில் பலத்த நிலநடுக்கம்: அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

கனடாவில் இருந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி – பாகிஸ்தான் உளவுத்துறையின் பின்னணி
World

கனடாவில் இருந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி – பாகிஸ்தான் உளவுத்துறையின் பின்னணி

தண்ணீர் நெருக்கடி, மின்சார குறைபாடு – மாற்றத்துக்காக போராடும் ஈரானிய மக்கள்!
World

தண்ணீர் நெருக்கடி, மின்சார குறைபாடு – மாற்றத்துக்காக போராடும் ஈரானிய மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : ரஷ்ய அதிபர் புதின் கடும் விமர்சனம்!
World

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : ரஷ்ய அதிபர் புதின் கடும் விமர்சனம்!

Next Post
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : ரஷ்ய அதிபர் புதின் கடும் விமர்சனம்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : ரஷ்ய அதிபர் புதின் கடும் விமர்சனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்
All News

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு
All News

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !
All News

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின்  மெய்ப்படும் சாட்சி !
All News

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.

%d