மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர்.
இமயமலையின் பகுதிகளில் அமைந்த டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப்பூர்துவார் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டார்ஜிலிங் மாவட்டத்தின் மிரிக் பகுதியில் பாலம் இடிந்து விழுந்ததில் பலர் பலியானனர்.
பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்திய வானிலை மையம் அடுத்த 48 மணி நேரங்களில் கூடுதலாக கனமழை பெய்யும் என அறிவித்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.











