Monday, Mar 2, 2026, 9:58 AM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட அரசு தீர்மானம் எடுக்க வேண்டும் – தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஏ. ஸ்டீபன் கோரிக்கை

Jan 31, 2026
A A
புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட அரசு தீர்மானம் எடுக்க வேண்டும் – தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஏ. ஸ்டீபன் கோரிக்கை
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி | 30.01.2026

வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி புனித வெள்ளி (Good Friday) தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஏ. ஸ்டீபன் அவர்கள் தமிழக முதல்வரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில், புனித வெள்ளி நாள் இயேசு கிறிஸ்துவின் தியாக மரணத்தை நினைவுகூரும் புனிதமான நாள் என்றும், அந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ சமூகத்தினர் சிலுவைப் பாதை ஊர்வலங்கள், இரத்த தான முகாம்கள், அமைதி ஊர்வலங்கள், அன்னதானங்கள் உள்ளிட்ட ஆன்மிக மற்றும் சமூக பணிகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி மற்றும் கேரளா மாநிலங்களில் புனித வெள்ளி தினத்தில் மதுக்கடைகள் மூடப்படுவது நடைமுறையில் உள்ளதாகவும், தமிழ்நாட்டிலும் ஏற்கனவே மகாவீர் ஜெயந்தி, மீலாது நபி, வள்ளலார் நினைவு நாள் போன்ற தினங்களில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன என்பதையும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோலவே, புனித வெள்ளி தினத்தையும் மதுக்கடை மூடல் நாளாக அறிவிக்க வேண்டும் என கடந்த 03.03.2022 முதல் பல்வேறு காலகட்டங்களில் அரசியல் கட்சிகள், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர்கள் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருவதாகவும், முன்னாள் சிறுபான்மையினர் நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் தற்போதைய ஆணையர் அருட்தந்தை ஜோ ஆருண் ஆகியோருக்கும் இதுகுறித்து மனுக்கள் அளிக்கப்பட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் மதுக்கடை எண்ணிக்கை குறைப்பு, மறுவாழ்வு மற்றும் மதுவிலக்கு சிகிச்சை மையங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களையும் ஆயர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, சட்டமன்ற விதி 110ன் கீழ் தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு முன்பாகவே ஒரு சிறப்பு கொள்கை தீர்மானம் எடுத்து, புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கோரிக்கைக்கு ஆதரவாக, தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு அருட்தந்தை ஜோசப் ரவிபாலன், மறைமாவட்ட தலைமைச் செயலர் அருட்தந்தை சகாய லூட்ரின் உள்ளிட்ட மறைமாவட்ட நிர்வாகிகள் கடிதத்தில் இணைந்து கையெழுத்திட்டுள்ளனர்.

Reporter – R. Kannan, Thoothukudi .

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X

Like this:

Like Loading...
Previous Post

ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டையில் அதிகரிக்கும் திருட்டுகள் : இரவு ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் – திருவள்ளூர் எஸ்.பி-க்கு தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி. டாக்டர் சிவா கோரிக்கை

Next Post

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

Related Posts

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்
All News

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு
All News

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !
All News

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின்  மெய்ப்படும் சாட்சி !
All News

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டையில் அதிகரிக்கும் திருட்டுகள் : இரவு ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் – திருவள்ளூர் எஸ்.பி-க்கு தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி. டாக்டர் சிவா கோரிக்கை
All News

ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டையில் அதிகரிக்கும் திருட்டுகள் : இரவு ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் – திருவள்ளூர் எஸ்.பி-க்கு தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி. டாக்டர் சிவா கோரிக்கை

“சட்டத்தின் பெயரில் மௌனம்: தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை – கேள்விகளுக்கு பதிலில்லாத அதிகாரம்”
All News

“சட்டத்தின் பெயரில் மௌனம்: தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை – கேள்விகளுக்கு பதிலில்லாத அதிகாரம்”

Next Post
திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின்  மெய்ப்படும் சாட்சி !

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்
All News

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு
All News

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !
All News

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின்  மெய்ப்படும் சாட்சி !
All News

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.

%d