Saturday, Jan 17, 2026, 5:27 AM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

Jan 17, 2026
A A
கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
FacebookTwitterWhatsappTelegram

கீழக்கரை பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், எந்தச் சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கடலில் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வள்ளல் சீதக்காதி சாலை பகுதியை ஒட்டிய கடற்கரைப் பகுதியில், திறந்த கால்வாய் வழியாக கருப்பு நிற கழிவுநீர் கடலுக்குள் செல்லும் நிலை காணப்படுகிறது.
இந்த கழிவுநீரால் கடல் நீர் மாசடைந்து, மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதுடன், மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், இப்பகுதியில் கடலில் குளிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தோல் நோய்கள், குடல் சம்பந்தமான நோய்கள், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுற்றுப்புற ஆர்வலரும் சமூக செயல்பாட்டாளருமான முகைதீன் இப்ராஹிம் அவர்கள் கூறுகையில், “கழிவுநீர் தொடர்ந்து கடலில் கலப்பது கடற்கரை மணற்பரப்பையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும். இது நீண்டகாலத்தில் கடல்சூழலையே அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்” என எச்சரித்தார்

எனவே, கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, கழிவுநீரை முறையாக சுத்திகரித்து வெளியேற்றும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், திறந்த கால்வாய்களை மூடிக் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையேல், இன்று கவனிக்கப்படாத இந்த பிரச்சனை, நாளை பெரும் சுற்றுச்சூழல் பேரழிவாக மாறும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறப்பு நிருபர் – கீழை பிரபாகரன்.
தொடர்பு எண் – +91 97892 29862

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

Related Posts

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்
Breaking News

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
District

புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு
Agriculture

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Agriculture

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.
Spirituality

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.