25 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பு – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் பாராட்டு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகளாக அரசின் தலைமை பொறுப்பில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக பணியாற்றி வருவதாக பாராட்டியுள்ளார்.
பழனிசாமி வெளியிட்ட பதிவில், இது ஒரு வரலாற்று சாதனை என்றும், பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடி தேசத்திற்காக நேர்மையாக சேவை செய்து, ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்பதும் அவர் குறிப்பிட்டார்.











