Monday, Mar 16, 2026, 4:53 PM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

விவசாய வளர்ச்சிக்கு மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகள் என்ன?

Oct 8, 2025
A A
விவசாய வளர்ச்சிக்கு மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகள் என்ன?
FacebookTwitterWhatsappTelegram

விவசாய சீர்திருத்த சட்டங்களும், அரசுகளின் பங்களிப்பும் – விவசாயிகளின் பார்வை

இந்தியா சுதந்திரம் பெறிய பிறகு, எந்த மத்திய அரசும் முழுமையான விவசாய சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை. தேர்தல் காலங்களில், அரசியல் கட்சிகள் விவசாயிகளை மட்டுமே ஓட்டுக்காகப் பயன்படுத்தி, கடன் தள்ளுபடி மாதிரி வாக்குறுதிகளை அளித்து வந்தன. ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சீர்திருத்த சட்டங்கள், விவசாயிகளுக்கு நேரடியாக பலன் தரும் புதிய வாய்ப்புகளை உருவாக்க முயற்சிக்கிறது.

விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் உரிமை
இந்தச் சட்டத்தின் கீழ், விவசாயி தன் விளைபொருட்களை, இடையிலான மண்டிகள் இல்லாமல், நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். தானே விலை நிர்ணயம் செய்து, நேரடியாக விற்பனை செய்தால் இடைக்கால வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள்.

தனி பட்ஜெட்
விவசாய நலத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு விவசாயத்திற்காக தனி பட்ஜெட் அறிமுகப்படுத்த வேண்டும்.

ஆதார விலை நிர்ணயம்
மத்திய மற்றும் மாநில அரசுகள், விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் போது, விவசாய பிரதிநிதிகளை கட்டாயமாக சேர்க்க வேண்டும். அனைத்து உற்பத்தி செலவுகளையும் சரியாக கணக்கிட்டு, விவசாயிகளுக்கு நீதி தரும் விதத்தில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

குளிர்பதன கிடங்குகள்
காய்கறி, பழங்கள் போன்றவை சேமிப்பு முறையில் சிறந்த தரத்தை தருவதால், அரசு நாடு முழுவதும் குளிர்பதன கிடங்குகளை நிறுவி, விவசாயிகளுக்கே 100% முன்னுரிமை வழங்க வேண்டும். இந்தக் கிடங்குகளில் வைக்கப்பட்ட பொருட்களுக்கு அரசு வங்கி கடன் வழங்கி, விவசாயி விரும்பும் நேரத்தில் விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

விவசாய அடையாளம்
விவசாயிகளின் பாதுகாப்புக்கு, அவர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் உறுதியாக அடையாளம் காட்ட வேண்டும். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக லாபம் பெற குறைந்த விலைக்குத் தான் வாங்கும் அபாயத்தை தவிர்க்க, ஆதார விலை நிர்ணயம் செய்து உறுதிமொழி வழங்க வேண்டும்.

ஏற்றுமதி வாய்ப்பு
அதிக விளைச்சல் வரும் காலங்களில், அரசு ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கி, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகையாக்க வேண்டும். கடன் மற்றும் வங்கி உதவிகளுடன், அதிக விளைச்சலை கையாளும் முறையை அரசு அமைக்க வேண்டும்.

தட்டுப்பாடற்ற உரங்கள் மற்றும் உற்பத்தி ஆலோசனை
நாட்டு வெளியீட்டு சந்தைகளில் விலை நன்கு கிடைக்குமாறு, உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனையும், உற்பத்தி வழிகாட்டுதல்களும் அரசு வழங்க வேண்டும்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்
விவசாய பணிகளுக்கு மனித வளம் இல்லாத நிலை ஏற்பட்டால், 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி, விவசாய பணிகளுக்காக திறம்பட வேலைநிறுவல் செய்ய வேண்டும்.

மானியம் மற்றும் லாப திட்டங்கள்
விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டிய அவசியம் குறையும் வகையில், ஆதார விலை மற்றும் உற்பத்தி செலவை சரியாக நிர்ணயம் செய்ய வேண்டும். இது அவர்களுக்கு நிலையான லாபத்தை உறுதி செய்யும்.

விவசாயிகளின் மனநிலை மற்றும் தற்கொலை தடுப்பு
விவசாயிகள் ஏன் துன்பத்தில் இருக்கிறார்கள் என்பதை அரசுகள் மனசாட்சியுடன் ஆய்வு செய்து, பயிர் பாதுகாப்பு காப்பீடு போன்ற திட்டங்களை வழங்கி, அவர்களை தற்கொலை செய்யும் நிலைமையிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

மொத்தமாக, விவசாய சீர்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மட்டும் போதாது; விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகாரம் செய்யும் பணியிலும் மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். இதை செய்யுமா அரசுகள்? விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X

Like this:

Like Loading...
Tags: விவசாய வளர்ச்சிக்கு அரசுகளின் நடவடிக்கைகள் என்ன
Previous Post

பாகிஸ்தான் கடன் சிக்கலில் – IMF எச்சரிக்கை!

Next Post

மூன்றரை ஏக்கரில் காய்கறி பயிர் – கத்திரி, வெண்டை, பாகலில் ரூ.3.90 லட்சம் வருமானம் பெற்ற சகோதரர்கள்

Related Posts

அதிகாரிகள் புறக்கணித்த கிராம சபை கூட்டம் – தனிநபர் தலைமையில் நடந்ததாக குற்றச்சாட்டு-தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
Agriculture

அதிகாரிகள் புறக்கணித்த கிராம சபை கூட்டம் – தனிநபர் தலைமையில் நடந்ததாக குற்றச்சாட்டு-தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்.
Agriculture

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்.

செண்பகவல்லி பொங்கல் விழா…200 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுஉற்சாக எழுச்சி..!
Agriculture

செண்பகவல்லி பொங்கல் விழா…200 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுஉற்சாக எழுச்சி..!

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு
Agriculture

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Agriculture

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கொட்டிக் கொடுக்கும் கொய்யா – பழங்கள், ஜாம், டீத்தூள், பற்பொடி; ஆண்டுக்கு ரூ.12 லட்சம் லாபம்!
Agriculture

கொட்டிக் கொடுக்கும் கொய்யா – பழங்கள், ஜாம், டீத்தூள், பற்பொடி; ஆண்டுக்கு ரூ.12 லட்சம் லாபம்!

Next Post
மூன்றரை ஏக்கரில் காய்கறி பயிர் – கத்திரி, வெண்டை, பாகலில் ரூ.3.90 லட்சம் வருமானம் பெற்ற சகோதரர்கள்

மூன்றரை ஏக்கரில் காய்கறி பயிர் – கத்திரி, வெண்டை, பாகலில் ரூ.3.90 லட்சம் வருமானம் பெற்ற சகோதரர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்
All News

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு
All News

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !
All News

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின்  மெய்ப்படும் சாட்சி !
All News

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.

%d