சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை – அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு
அரியலூர்: தஞ்சை மாவட்டம் அணைக்கரையைச் சேர்ந்த முருகேசனின் மகன் அன்பரசு (23), அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததற்காக அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கை பதிவு செய்து, கடந்த 4-10-2025 அன்று அன்பரசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிபதி மணிமேகலை வழக்கில் தீர்ப்பு அளித்ததில், அன்பரசுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அன்பரசு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.











