Saturday, Jan 17, 2026, 4:22 PM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

பழங்குடியின மக்களின் உரிமை மீறல் – சரணாலயம் அமைப்பை எதிர்த்து பிருந்தா காரத் கண்டனம்!

Oct 6, 2025
A A
பழங்குடியின மக்களின் உரிமை மீறல் – சரணாலயம் அமைப்பை எதிர்த்து பிருந்தா காரத் கண்டனம்!
FacebookTwitterWhatsappTelegram

சரணாலயம் அமைப்பதன் பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது – பிருந்தா காரத் கண்டனம்!

நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் “சரணாலயம் அமைக்கிறோம்” என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்படுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் பிருந்தா காரத் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநாட்டில், மாநில செயலாளர் சண்முகம் மற்றும் பிருந்தா காரத் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது உரையாற்றிய பிருந்தா காரத் கூறியதாவது –

“வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் நில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. மலைவாழ் மக்களின் உரிமைகள் அமலாக்கப்படாததால், அவர்கள் வாழ்க்கை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது,

“தமிழகத்தில் சுமார் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் நில உரிமைக்காக மனுக்கள் அளித்துள்ளனர். ஆனால், அவற்றில் பாதி மனுக்களும் கூட இதுவரை அரசு ஏற்கவில்லை. மலைவாழ் மக்களின் சட்ட உரிமைகள் அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம். இல்லையெனில், அவர்கள் அடையாளமே அழிந்து விடும்,” எனக் கண்டனம் தெரிவித்தார்.

இதே நிகழ்ச்சியில் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், “தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் சனிக்கிழமை மட்டும் கட்சியை இயக்கும் நிலை உள்ளது” என்று தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.

அவர் மேலும்,

“கேரளாவைப் போன்று, மலைப் புலையர் சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும்,
“ஆனால் தற்போது அதிகாரிகள் தவறாக அவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்கும் வகையில் கடிதங்கள் அனுப்பியுள்ளனர். இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,” என்றும் கூறினார்.

மாநாட்டில் பழங்குடியினர் உரிமைகள் மற்றும் வன சட்ட அமலாக்கம் குறித்து பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Tags: கண்டனம்பிருந்தா காரத்மக்களின் வாழ்வுரிமை
Previous Post

திமுக அரசின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுகிறது – எடப்பாடி

Next Post

மனித உரிமைகள் குறித்து பேசுவீர்களா?” – ஐ.நா.வில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா கடுமையான பதிலடி!

Related Posts

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்
Breaking News

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு
Agriculture

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Agriculture

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கீழக்கரை சாலை சேதம் குறித்து விழிப்புணர்வு போராட்டம் அறிவிப்பு
All News

கீழக்கரை சாலை சேதம் குறித்து விழிப்புணர்வு போராட்டம் அறிவிப்பு

Next Post
மனித உரிமைகள் குறித்து பேசுவீர்களா?” – ஐ.நா.வில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா கடுமையான பதிலடி!

மனித உரிமைகள் குறித்து பேசுவீர்களா?” – ஐ.நா.வில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா கடுமையான பதிலடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.
Spirituality

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.