Monday, Mar 2, 2026, 9:58 AM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

Feb 10, 2026
A A
திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின்  மெய்ப்படும் சாட்சி !
FacebookTwitterWhatsappTelegram

சமத்துவம், சமூகநீதி, சமூக பாதுகாப்பு என்று அரசியல் மேடைகளில் பேசப்படும் வார்த்தைகள், இக்குடியிருப்புக்கு வந்தபோது அர்த்தம் இழந்து மௌனமாகி விடுகின்றன. இப்பகுதி மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும், அரசு நிர்வாகம் தங்களை தீண்டத்தகாத குடிமக்கள் போல நடத்துகிறது என்றும் கடும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

அடிப்படை சுகாதார வசதிகள் – 10 ஆண்டுகளாக பூஜ்யம்

தூத்துக்குடி மாவட்டம், மாப்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ்காந்தி குடியிருப்பு பகுதி, கடந்த 10 ஆண்டுகளாக அரசின் கவனத்திற்கே வராத ஒரு ‘புறக்கணிக்கப்பட்ட பகுதி’யாக மாறி உள்ளது. சுமார் 350 குடும்பங்கள் அடிப்படை மனித உரிமைகள் இன்றியே வாழ்ந்து வரும் இப்பகுதி, “அனைவருக்கும் வளர்ச்சி” என அரசு முழங்கும் கோஷங்களின் பொய்மை முகத்தை வெளிச்சம் போடுகிறது.

குப்பை அகற்றும் பணியாளர்கள் வருவதில்லை,

கழிவுநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை,

இவை அனைத்தும் அரசின் கட்டாய கடமைகள் என்பதையும் பொருட்படுத்தாமல், இப்பகுதி மக்களின் வாழ்க்கை நிர்வாக அலட்சியத்தின் பலியாடாக மாற்றப்பட்டுள்ளது.


புகார்கள் – அலுவலகங்களில் கிடக்கும் காகிதங்கள் மட்டுமே

  • குடிநீர் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை
  • குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதில்லை

இச்சம்பந்தமாக,

  • ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,
  • சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்,
  • மாவட்ட ஆட்சியர்,
  • மாப்ளையூரணி ஊராட்சி தலைவர், செயலாளர்
  • நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,

என அனைத்து நிலைகளிலும் பதிவான புகார்கள் அளிக்கப்பட்டும், எந்தத் துறையும் பொறுப்பு ஏற்கவில்லை.
பொறுப்பை ஒருவர் மீது ஒருவர் தள்ளி விட்டு, 350 குடும்பங்களின் வாழ்வை அரசியல் அமைப்பு பலியிட்டு வருகிறது என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.


அரசு வசதிகள் இல்லாத குடியிருப்பு – திட்டமிட்ட புறக்கணிப்பா?

350 குடும்பங்கள் வாழும் இந்த குடியிருப்பில்,

  • அங்கன்வாடி மையம் இல்லை,
  • குழந்தைகள் விளையாட ஒரு பூங்கா கூட இல்லை

என்பது, இது தற்செயலான தவறா? அல்லது திட்டமிட்ட புறக்கணிப்பா? என்ற கடும் கேள்வியை எழுப்புகிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் அரசின் அலட்சியத்தின் நேரடி பாதிப்பாளர்களாக மாறியுள்ளனர்.


அரசு நலத்திட்டங்கள் – காகிதத்தில் மட்டும்

அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், இப்பகுதியில் பட்டியல்களில் மட்டும் இருக்கின்றன. நடைமுறையில் இவை எதுவும் மக்களுக்கு சென்றடைவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் சமூக, பொருளாதார ரீதியாக தொடர்ந்து பின்தள்ளப்பட்டு, அரசு உருவாக்கிய சமத்துவச் சுவருக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளனர்.


அரசின் வேலையை மக்கள் செய்கிறார்கள்

அடிப்படை சுகாதார வசதிகளை அரசு வழங்கத் தவறியதால், மக்கள் தங்களே பணம் திரட்டி சாக்கடை அகற்றுதல், கழிவுநீர் சுத்தம், குப்பை அகற்றுதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
வரி வசூலிக்கும் அரசு – கடமை செய்யாத அரசு என்ற குற்றச்சாட்டு இங்கு வலுவாக எழுகிறது.


வீடுகளுக்குள் புகும் கழிவுநீர் – நிர்வாக தோல்வியின் உச்சம்

தற்போது கழிவுநீர் வடிகால்கள் முழுமையாக அடைந்து, வீடுகளின் பாத்ரூம்களில் இருந்து கழிவுநீர் வெளியேறி, தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இது வெறும் சுகாதார பிரச்சினை அல்ல – அரசு நிர்வாகம் முற்றிலும் தோல்வியடைந்ததற்கான வெளிப்படை சாட்சி.

டெங்கு, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகி, இந்த பகுதி ஒரு நடமாடும் நோய் மையமாக மாறும் அபாயத்தில் உள்ளது.


மக்கள் கேள்வி – “இது அரசா? இல்லை அலட்சிய அமைப்பா?”

இந்த நிலை குறித்து பலமுறை சுட்டிக்காட்டிய போதும்,
தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை மௌனம் காத்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  • கழிவுநீர் அடைப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்
  • முழுமையான சுத்தம், கிருமிநாசினி தெளிப்பு செய்ய வேண்டும்
  • நிரந்தர குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும்

என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

ரா . கண்ணன் – சிறப்பு நிருபர் தூத்துக்குடி.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X

Like this:

Like Loading...
Previous Post

புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட அரசு தீர்மானம் எடுக்க வேண்டும் – தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஏ. ஸ்டீபன் கோரிக்கை

Next Post

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

Related Posts

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்
All News

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு
All News

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !
All News

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட அரசு தீர்மானம் எடுக்க வேண்டும் – தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஏ. ஸ்டீபன் கோரிக்கை
All News

புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட அரசு தீர்மானம் எடுக்க வேண்டும் – தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஏ. ஸ்டீபன் கோரிக்கை

ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டையில் அதிகரிக்கும் திருட்டுகள் : இரவு ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் – திருவள்ளூர் எஸ்.பி-க்கு தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி. டாக்டர் சிவா கோரிக்கை
All News

ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டையில் அதிகரிக்கும் திருட்டுகள் : இரவு ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் – திருவள்ளூர் எஸ்.பி-க்கு தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி. டாக்டர் சிவா கோரிக்கை

“சட்டத்தின் பெயரில் மௌனம்: தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை – கேள்விகளுக்கு பதிலில்லாத அதிகாரம்”
All News

“சட்டத்தின் பெயரில் மௌனம்: தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை – கேள்விகளுக்கு பதிலில்லாத அதிகாரம்”

Next Post
LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்
All News

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு
All News

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !
All News

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின்  மெய்ப்படும் சாட்சி !
All News

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.

%d