மத்திய அரசின் மானிய உதவி பெறும் தன்னார்வ நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்தது.
நீதிபதிகள் சூர்யக் காந்த், உஜ்ஜல் புயான் மற்றும் ஜோய்மால்யா பாக்ஸி அடங்கிய அமர்வில் இந்த மனு விசாரிக்கப்பட்டது.
அப்போது, இந்த மனுவில் கோரப்பட்ட விடயம் அரசின் கொள்கைச் சார்ந்தது எனக் கூறிய நீதிபதிகள், இடஒதுக்கீடு தொடர்பான நிபந்தனைகள் அல்லது விதிமுறைகளை நிர்ணயிப்பது கொள்கை அமைப்பாளர்களின் சிறப்புரிமை எனத் தெரிவித்தனர்.
இதனால், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதைத் தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், மனுதாரர்கள் தங்களது கோரிக்கையை விரிவாக அரசிடம் சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தியது.











